காதலின் அர்த்தம் என்னவென்றால்
உன் கண்களைப் பார்த்து
வாழ்க்கையை உணர்வது

உன்னிதய
துடிப்போடு
என்பெயரும்
கலந்திட
நம் காதலும்
அழகாக மலர்ந்தது....

நிசப்தமாக ஓடும் நேரம் கூட
காதலின் நிழலைக் கொண்டு
மனதை அலையச் செய்கிறது

பாசத்தின் ஒரு பார்வை
ஆயிரம் வார்த்தைகளை விட
ஆழமான அர்த்தம் தருகிறது

என் சொர்கத்தை
எங்கும் தேட தேவை
இல்லை
உன்னை சற்று
நினைத்தாலே போதும்

தொடு திரையில்
வந்தாலும் தொடும்
தூரத்தில்
உனை பார்த்தது
போல் வெட்கத்தில்
தவிக்குது மனம்

தூரம் அதிகமானால் என்ன?
அன்று உன் நிழலில்
பதுங்கி கொண்டவள்
இன்று உன் நிழற்படங்களை
பதுக்கி கொண்டிருக்கிறேன்

அடர்ந்த இரவில்
அவளின் மூச்சு மட்டும்
சப்தமாக கேட்டது

வாழ்க்கையில் எது ஒன்று
அதிக இன்பத்தை தருகின்றதோ
அதுவே சில வேளைகளில்
அதிக துன்பத்தையும் தரும்

அதிகாலை ஆதவனாய்
ஆழ் மனதுக்குள்
தோன்றி
உறக்கத்தயும் கலைத்து
விடுகின்றது
உன் நினைவு