நீ பேசும்போது
என் மனது காதலாகிறது
நீ அசைந்தால்
என் உலகமே நடனமாடுகிறது
என் கோபத்தின்
முற்றுப் புள்ளி நீ
மௌனத்தில் இருந்து பிறக்கும்
நொடியே உண்மையான காதலின் ஒலி
பார்த்தநொடியே
கண்களுக்குள்
ஓவியமானாய்
காத்திருக்கு
விழிகளும்
உன்னுடன் சேர்ந்து
காவியம் பாட
ஒரு முறையேனும்
வீழ்த்திட வேண்டும்
நானுனை ஜெயித்திட
விழி போரில்
சிறு சிரிப்பிலேயே
பாசம் மலர்ந்து
இருள் சூழ்ந்த நாள்களையும்
ஒளியாக மாற்றும்
விரும்பியவன் அருகில் இருந்தால்
உலகமே ஒரு சொர்க்கம் போல தெரியும்
கண்களிலிருந்த வெளிச்சம்
காதலின் அமைதியான
குரலாக ஒலிக்கிறது
தொடுதலில் துடிக்கும் இதயம்
பெயரில்லா உணர்வின் சாட்சியம்
கடத்துகிறாய்
காந்த கண்களால்
நழுவுகிறது
இதயமும்
உன் பக்கம்
💖 பக்கம் 38 / 478
📋 Copied