தோளில் சாயும் கணம்
வாழ்நாள் முழுவதும்
மறக்க முடியாத
கவிதையாக மாறுகிறது
தானாய் மலரும்
பூவாய் நீயும்
மலர்ந்தாய்
என் இதயத்தில்
என்றும்
உதிரா (சு)வாசமாய்
அழகாய்
நீ என் அருகில் வந்தால்
சுவாசமே இனிப்பு ஆகிறது
கண்ணாடியில்
ஒரு பெண்
தன்னை ரசித்து கொள்ளும்
அழகை விட
காதலோடு தனக்கு
பிடித்தமான ஒருவர்
அவளை ரசித்து சொல்லும்
அழகு பேரழகு
தினமும் நிழலாய்
தொடர்கிறேன்
நீ என் ஒளி
என நினைத்து
உன் பார்வை மட்டும் போதும்
என் வாழ்க்கை முழுவதும்
ஒரு கவிதையாக மாறிவிட
நட்சத்திரம் கூட
அவளின் கண்களில் ஒளி
பெற்றதுபோல் தோன்றுகிறது
உன் பிரிவின் வெப்பத்தில்
ஆவியாகி விட்டது
கண்ணீர் குளம்
ஆகாயத்தை அண்ணாந்து
பார்த்து காத்திருக்கிறது
மீண்டும் உன் பிரிய
மழையில் நனைய
இரவில் பேசும் ஒரு மூச்சு
பகலின் ஆயிரம்
கவிதைகளுக்கு சமம்
செய்தி வாசித்து
நாட்கள் ஆயிற்று
உன்னில் வசிக்க
தொடங்கிய பிறகு
உன்னை தவிர வேறு
உலகம் கிடையாது எனக்கு
💖 பக்கம் 374 / 478
📋 Copied