மனதின்
அமைதியிலே ஒரு ஓசை
அதுவே காதல்
உன் பெயரை
என் இதயம்
சொல்லும் விதம்
வேறு யாராலும்
உச்சரிக்க முடியாது
பார்வை சேரும் தருணம்
இதயத்துக்குள் புது உலகம் மலர்க்கிறது
எதுவும் தோனாத
போதுதான் உணர்கிறேன்
நீ எல்லாமுமாக
எனக்குள் இருப்பதை
என்னருகே நீ
இல்லை என்பது
உண்மை அவ்வளவு
உண்மை நீ என்னுள்
இருக்கிறாய் என்பதும்
அருகில் சாயும் மூச்சு
இதயத்தில் தீப்பொறியை ஏற்றுகிறது
சுட்டெரிக்கும்
வெயிலிலும்
மழைசாரலாய்
நீயென்னை
கடக்கயில்
இதயமும்
நனையுதே
நான் தியானிக்கும்
பூங்காற்று நீ
என் தியானத்தின்
உயிர் மூச்சு நீ
இரவின் அமைதியில்
மூச்சின் இசை
காதலின் கவிதை ஆகிறது
அழகில் மட்டும் இல்லை
ஆசையில் அழகு என்னும்
புதையல் இருக்கிறது
💖 பக்கம் 372 / 478
📋 Copied