யாரோ இருவர்
கரங்களை கோர்த்தபடி
எனை கடக்கயில்
நாமிணைந்து
பயணித்த பயணங்கள்
தொடர்கிறது
என் மனதிலும்
மாலை நேர நிழலில்
காதல் வார்த்தையின்றி
இதயங்களை இணைக்கும்
அமைதியான மொழியாகிறது
கரை சேரும்
எண்ணமில்லை
நீந்துவது
உன் காதல்
கடலில் என்பதால்
மூழ்கினாலும்
எட்டி
நீ போனாலும்
நித்தம் மனதை
கொல்லுது
கொலுசொலி
உன் நினைவு
சின்னமாய்
பேசாமலே காதலிக்க தெரிந்தால்
வார்த்தைகள் தேவைப்படாது
இதயம் நேசிக்க
காரணம் தேடாது
உணர்ச்சி வந்தால் போதும்
யார் இல்லாமல்
வாழ முடியாதோ
அவர்களோடு வாழ்வது தான்
மகிழ்ச்சியான வாழ்க்கை
காதல் என்பது
தோள்மீது சாய்வதல்ல
நெஞ்சமெல்லாம் கையடக்கமாதல்
நிஜமென்றால்
கடந்துவிடும்
கனவென்றால்
கலைந்துவிடும்
நினைவில் மட்டுமே
மிதக்கும்
நீங்காத உன் நினைவு
நிம்மதியாய்
இருவர் சேர்ந்து சிரிக்கும்
ஒரு தருணம்
ஆயிரம் கவிதைகளுக்கும் சமம்
💖 பக்கம் 323 / 478
📋 Copied