உனை சுமந்தே
காத்திருக்கு கண்களும்
மன கதவையும்
திறந்தே
நீ வருவாயென
கண்ணாடியில்
எனை ரசிப்பதைவிட
உன் விழிகளுக்குள்
ரசிக்கவே விரும்புது
மனம்
மௌனம் பேசத் தொடங்கும்
தருணமே காதல்
உயிர் பெறும் கணம்
மூச்சை மறந்து
ஓர் அலையாய் மாறும்
நொடியில் தான்
உணர்ச்சியின் உண்மை வெளிப்படும்
ஒரு முறையேனும்
வீழ்த்திட வேண்டும்
நானுனை ஜெயித்திட
விழி போரில்
அன்பு நம்பிக்கையுடன்
கலந்தால் அது வாழ்நாள்
பயணம் ஆகிறது
இருளுக்குள்
அகப்பட்டுக் கொண்டது
வெட்கங்களும் பேசியே
உனை கொல்லப் போகிறேன்
தைரியமாய் விழிகளால் சுகமாய்
ஊருக்குத்தான் ஊரடங்கு
நம் உள்ளத்திற்கல்ல
என்று நான்
நினைத்தவுடன்
மனதுக்குள்
வந்து விடுகிறாய்
உலாவ அன்பே
அந்த நிலாவாக
காத்திருந்த செவிகளுக்கு
விருந்தளித்தது அன்பே
என்ற உன் குரல்
இரவின் அமைதியை
உடைக்கும் மூச்சுகள்
இரு இதயங்களின்
இசையை உருவாக்குகின்றன
💖 பக்கம் 221 / 478
📋 Copied