நெஞ்சில் காற்றாக நுழைந்தாள்
பின்னாடி மூச்சே மறந்தேன்
உன்னுலகுக்குள் எனையும்
அழைத்து செல்லும்
வித்தையேதும்
வைத்திருக்கின்றாய
மூச்சு காற்றில்
உன்னருகில் என்னுலகமும்
மறக்குதே எனக்கு
கண்கள் பேசும் காதல்
மெளனத்திலே வெறித்தனமான
உணர்வுகளை உதிர்த்துவிடும்
மௌனத்தில் கூட
இசையாய் ஒலிக்கும்
பாசமே காதல்
மாலை நேர நிழலில்
காதல் வார்த்தையின்றி
இதயங்களை இணைக்கும்
அமைதியான மொழியாகிறது
தனித்திருக்கும்
போதெல்லாம்
மனம் உன்னிடமே
தாவுது...
கண்ணெதிரே
நீயிருந்தால்
என்னுள்ளத்திலும்
தினமும் கார்த்திகை
தீபம்தான்
(இருளில்லா)
பார்வை மோதிய நொடியில்
மனம் வழி தவறியது
சுவாசம் பகிர்ந்த தருணம்
காலத்தை நிறுத்தி விடுகிறது
என் கனவுகளின்
எல்லைகளிலும்
நீயே இருப்பது
காதலின் மாயம்
💖 பக்கம் 16 / 478
📋 Copied