பார்வையின் நெருக்கத்தில்
உடல் காந்தமாய்
இழுத்துக் கொள்கிறது
இதழ்களின் மௌனம் கூட
இருவிழிகளில் பேசும்
காதலை அடக்க முடியாது
மறந்துப்போன
மகிழ்ச்சியை
மறுபடியும்
மலர
வைத்தாய் நீ...
மனதின் ஆழத்தில்
பிறக்கும் கருணை
வார்த்தையின்றி
பாசமாக உருமாறும்
நெருக்கம் அதிகரிக்கும் போது
மௌனம் கூட இனிமையாகிறது
காதல் ஒரு நிஜ கனவு
விழித்தாலும் உறங்கினாலும்
தூரமில்லாத உணர்வு
காதலின் கருவறையில்
ஒட்டிப் பிறந்த
குழந்தைகள் நாம்
ஒருவரையொருவர்
விட்டுப் பிரியா
நீயும் நானும்
உன்னோடு பேசாத
நொடி கூட
என் இதயம் ஓயாத
ஓசை போல இருக்கிறது
இதயம் தேடும் பெயர்
ஒரே ஒருவர் என்றால்
அது காதலின்
சாத்தியமற்ற சாத்தியமே
உன் தரிசனத்துக்காகவே
விரைந்தோடுது மனம்
💖 பக்கம் 17 / 478
📋 Copied