இதழ்கள் என் மீது தடவப்படும்
ஒவ்வொரு கணமும்
தீயில் கரையும் மெழுகு போல
என்னை மாற்றுகிறது
மௌனத்தின் நடுவே கூட
பாசம் பேசும் மொழியாக
மனதிற்குள் ஓடி வந்து நிற்கிறது
தவிர்க்க முடியாத
காலை நேர
தேனீராய்
நம் நினைவுகளையும்
நான் சுவைக்க
தவறுவதில்லை
அன்பே
தடைகளை எண்ணும் விழிகள்
அனுமதியை எதிர்பார்க்கும்
ஆசையை மறைக்க முடியாது
பல காலங்கள்
கடந்தும் கூட
இன்று வரை
காலாவதி ஆகாமல்
இருந்து கொண்டு இருப்பது
காதல் என்ற ஒன்று மட்டுமே
கை பிடித்த அந்த சூடே
இரவு முழுவதும் நெஞ்சில் தங்கிவிடுகிறது
ஒரு முத்தம் ஓரு நொடி மட்டும்தான்
ஆனால் அதில் நிறைந்த உணர்வு
ஒரு வாழ்நாள் இருக்கும்
இரண்டு இதயங்கள்
ஒன்று சேரும்
முதல் இடம் முத்தம்
நீ முறைத்தாலும்
காதல் தான்
என்று எனை
வார்த்தையிலும்
கவிழ்த்திடும்
கள்வன் நீ
என் கண்களுக்கு
நீ காட்டிய அழகை விட
என் உள்ளத்துக்கு
நீ காட்டிய
அன்பே உயர்ந்தது!
💖 பக்கம் 144 / 478
📋 Copied