பிறை போன்ற இரு
புருவங்களுக்கு இடையில்
என்றும் பிரியாமல் அவளின்
கையால் தினந்தினம் நெற்றியில்
ஓடி வந்து ஒட்டிக்கொள்ளும்
ஓர் வெள்ளி நட்சத்திரம்
உன் அழகிய சந்தனம்
கை கோர்த்துக் கொண்ட நொடி
நித்தியமாக வாழ்ந்த
உணர்வை தருகிறது
மௌனமான இரவு
ஆசையின் மொழி பேசும் தாளம்
உன் முந்தானையில்
ஒரு முகக்கவசம் கொடு
ஆயுள் முழுவதும்
ஆக்ஸிஜன் இன்றி
வாழ்கிறேன் உன்னுடன் நான்
தூரிகை என்றாலே
என் விழிகள்
ரசிக்கும் ஓவியம்
நீயாகுறாய்
அழகாக தீட்டாமலேயே
சில உணர்வுகள்
காரணம் கேட்காமல்
இதயத்தில் குடியேறிவிடும்
உருகுவோம்
ஒன்றாகவே
அன்பெனும்
அக்னியில்
கண்களுக்குள்
வாசிக்க முடியாத
கவிதைதான் உண்மை காதல்
இரவில் நம் உதடுகள்
பேசும் மொழியை
பகல் கூட புரிய முடியாது
துன்பக் கடலில்
தத்தளித்தபோது
அலைபோல்
வந்தென்னை
கரைசேர்த்தாய்
💖 பக்கம் 142 / 478
📋 Copied