விரல்கள் தேகத்தில்
வழியும் போது
நேரமே தடம் மாறுகிறது
பார்வையில்
ஒரு புன்னகை விழுந்தால்
வாழ்வே மலர்கிறது
மகிழ்வாய் நீளும்
நம் பயணத்தில்
எப்போதும்
என் பாதை
நீயே அன்பே
விரல் தொடும்
அந்தச் சிறு நொடி
உயிரையே உருக்கும்
கனிவு கொண்டது
ஒரு மெல்லிய முத்தம்
ஆயிரம் வார்த்தைகளின்
அர்த்தத்தை சொல்லி விடும்
அடை மழையில்
நனைவதும் ஆனந்தமே
பொழிவது நீ
முத்தங்கள் என்றால்
இதழ்கள் என்னை
தீண்டும் தருணம்
நேரத்தை நின்றுபோய்
ரசிக்க வைத்துவிடுகிறது
இதயம் ஒருமுறை
சொன்ன உண்மை
ஆயுள் முழுக்க ஒலிக்கிறது
பார்வை மோதிய நொடி
மனம் திசை தெரியாமல் போனது
நினைவை தூதனுப்பி
உன் உலகுக்குள்
அழைத்து
வந்து விடுகிறாய்
💖 பக்கம் 141 / 478
📋 Copied