மைனாக்கள் கூட
உன்னிடம் கூடு கட்ட
கற்றுக்கொள்ள ஆசை
படுகிறதடி மங்கை நீ
கூந்தல் கட்டும்
அழகை பார்த்தபின்

வார்த்தை பேசாமல்
மனசு பேசும் போது
அதுவே உண்மையான காதல்

மௌனத்துக்குள்ளே நுழையும்
அன்பு தான்
ஆழமான காதலின் உருவம்

துளித் துளியாய்
உன் புன்னகை
துளிர்க்கின்றதே
ஒரு நேசம்

நீயில்லா உலகத்தை
நினைத்தாலே பயமாக இருக்கிறது
ஏனென்றால் என் உயிரும்
என் காதலும் உன்னுடன்
பின்னிப்பிணைந்திருக்கிறது

பாசம் ஒரு சுகம் அல்ல
அது ஒரு அடிமை

கைகளில்
கனஏட்டை தாங்கியிருந்தாலும்
என் மன ஏடு
ஏந்தியிருப்பது உனையே

காதல் ஒரு புன்னகை
ஆனால் அதில்
மறைந்திருக்கும் உணர்வுகள்
ஆயிரம் கதைகள் சொல்லும்

கல்லுக்குள் ஈரமாய்
கண்ணுக்குள்ளும்
காதலுண்டு
நீ உணர்வாயா
என்னுயிரே

எதிர்பார்பென்று
எதுவும் இருந்ததில்லை
உன்னை காணும்
வரையில் என்னுள்