வாழ்க்கை உனக்கு
கடினமாக இருக்கலாம்
ஆனால் அதில் நீயே வலிமை
வெற்றியை நோக்கி
செல்லும் பாதையில்
வெறுப்பும் விமர்சனமும்
கற்களாக வரும்
அதை கடந்து
செல்லும் காலடிகள்
வெற்றியின் சுடரை
எரியச் செய்கின்றன
நிழலைக் குற்றம் சொல்லாதே
அது ஒளியின் பின்
நடக்கும் சாயல்தான்
நலம் விசாரிப்பதோடு
வார்த்தைகளை
முடித்துக்கொண்டால்
உறவுகள் நீடிக்கும்
பொறாமை என்பது
வெற்றியின் கதவை பூட்டும்
மறைமுகச் சங்கிலி
சிரிப்பால் தொடங்கும் நாள்
மனதை வெல்லும்
வாழ்க்கையாக மாறும்
வறுமை இல்லாமல்
வாழ வேண்டும்
என்று கடவுளை
வேண்டுவதை விட
வறுமையைக் கொடுத்தாலும்
அதனை தாங்கும் சக்தியையும்
சமாளிக்கக் கூடிய திறமையையும்
கொடு என்று
வேண்டுவதே சிறந்தது
முடியாது
என எதையும்
விட்டு விடாதே
முயன்றுபார்
நிச்சயம்முடியும்
வாழ்வில் பிரச்சனைகள் முடிவல்ல
அவை நம்மை மாற்றும் தொடக்கம்
நாட்களும்
நேரங்களும்
கடந்து போகும் போது
மீதம் இருப்பது
நாம் மட்டுமே
📖 பக்கம் 305 / 606
📋 Copied