பல கஷ்டங்களை
கண்டு மரத்துப் போன
என் இதயத்திற்கு
தனிமையே
போதுமானதாக இருக்கின்றது
அறிவாளிகளுக்கு
அறிவுதான் அதிகம்
முட்டாளுக்குதான்
அனுபவம் அதிகம்
கனவை நினைப்பது போதாது
அதற்காக ஒரு சிறு முயற்சியை
இப்போது தொடங்கு
அனுபவம் மெதுவாக
தான் வாழ்க்கையை
கற்றுக் கொடுக்கும்
தனக்கு பிடிக்காதவரையும்
தன்னை பிடிக்காதவரையும்
கண்டும் காணாமல்
கடக்கும் பாதங்களே
மகிழ்ச்சிக்கு ஏங்காமல்
நிம்மதியில் நிறையும்
அன்று நமக்காக நேரம்
ஒதுக்கி அவர்கள் இன்று
நம்மையே ஒதுக்குகிறார்கள்
தொட்டுச் செல்லும்
நினைவுகளை தான்
விடாமல் துரத்துகின்றது
மனம்
பேசாமல் இருக்க
கற்றுக்கொள்வது
வாழ்க்கையின்
மிகப்பெரிய கலையாகும்
சொல்லவும் முடியாமல்
மெல்லவும் முடியாமல்
சில ஆசைகள்
மறக்கவும் முடியாமல்
வெறுக்கவும் முடியாமல்
சில நினைவுகள்
நெருங்கவும் முடியாமல்
விலகவும் முடியாமல்
சில உறவுகள்
சரியான நேரத்தில்
அமைதி காத்துவிடுவது
எதிர்காலத்தில்
மன அமைதியை
தேடி நிற்காமல் காக்கும்
📖 பக்கம் 306 / 606
📋 Copied