குனிவதால் எழுத்துகள்
நிமிரும் பணிவதால்
வாழ்க்கையும் உயரும்
நாம் யாரும்
தானே மாறுவதில்லை
யாரோ ஒருவரால்
மாற்றப் படுகிறோம்
நல்லவராக கெட்டவராக
ஏமாளியாக அப்பாவியாக
அறிவாளியாக முட்டாளாக
பணமும் மகிழ்ச்சியும்
பரம எதிரிகள்
ஒன்றிருக்கும் இடத்தில்
மற்றொன்று இருப்பதில்லை
உன் கனவுகள்
வாழ்வின் புதிய பாதையை
உருவாக்கும் வரை ஒளியாதே
வாழ்க்கை
என்ற படத்தில்
சிறப்பாக நடிப்பவர்கள்
நல்லவர்களாகவும்
நடிக்கத் தெரியாதவர்கள்
கெட்டவர்களாகவும்
ஆக்கப்படுகின்றனர்
முடிவுகளை முன்னால் வைத்து
பயணிக்காதே முயற்சியை முன்னால் வை
முடிவுகள் பின்னாலேயே வரும்
உறக்கம் தொலைந்த இரவுகளில்
உறங்கிய நினைவுகள்
விழித்துக்கொ(ல்)ள்கிறது
கடந்தகால அலட்சியம்
நிகழ்கால நீர்துளி
எதிர்கால ஏக்கத்துளி
நமக்கான
உயர்ந்த உணர்வு
நம் சுயமதிப்பு மட்டுமே
மனம் தளராதே கடைசி
சாவிதான் பெரும்பாலும்
கதவை திறக்கும்
📖 பக்கம் 236 / 606
📋 Copied