காதல் வந்த பிறகு
வாழ்க்கை மெதுவாக
இனிமை பேசத் தொடங்குகிறது
பார்வை மௌனமாகப் பேசும் போது
இதயம் ஒரு புதிய மொழி கற்றுக்கொள்கிறது
உன்
நினைவில்
என் நொடிகளும்
கரைந்துக் கொண்டிருக்கு...
இரவின் மௌனத்தில்
கலக்கும் மூச்சுகள்
காதலைக் கவிதையாக்குகின்றன
தொலைதூர நிலவாய்
நீ துரத்தும் மேகமாய்
உன் நினைவில் நான்
நிலவின் அழகை சொல்ல
வார்த்தைகள் கோடி
நீ எங்கு சென்றாலும் நான்
வருவேன் உன்னைத் தேடி
ஒரு இரவில்
மின்னும் நிலவு போல
காதலியின் சிரிப்பு
உள்ளத்தைக் கொளுத்தும்
அழகில் துவங்கி
ஆசையில் முடியும்
சில நேரங்கள்
நினைவாகவே ஒளிந்திருக்கும்
நீ விட்டுச் சென்ற
இடத்திலிருந்தே
விடாமல்
துரத்துகின்றன
உன் நினைவுகள்
மௌனம் பரிமாறிய போது
ஏற்படும் நெருக்கம்
வார்த்தைகளை விட
வலிமை வாய்ந்தது
💖 பக்கம் 93 / 478
📋 Copied