மனதிலும் மத்தாப்பு
பல வண்ணங்களில்
உனை காண
கண்கள்
சந்தோஷ தீப்பொறியாய்

மௌனத்தில் பேசும்
ஒருவர் இருந்தால்
அந்த நேசம் உண்மைதான்

நம் கவலைகளை
மறைய வைத்து
நம்மை சிரிக்க வைக்க
உண்மையாக நேசிப்பவர்களால்
தான் முடியும்

விழிகளால்
கட்டி போட்டு
விலகிடாதே
என்கிறாய்

காதல் மொழிகளை
கேட்க வேண்டாம்
இதயம் சொல்லும்
ஓசையை கேளுங்கள்

உன் உதடுகள் பேசும்
வார்த்தைகள் எனக்கே புரியாது
ஆனால் அந்த மூச்சின் மொழி
நன்றாக புரிகிறது

பார்வையின் ஆழத்தில்
சொந்தம் தோன்றும்
அதுவே காதலின் முதல் மெளனம்

பேச நினைத்த
வார்த்தைகளும்
தூரமானது உன்னருகில்

ஆழ்நிலை தியானத்திலும்
ஜெபிக்கின்றது
உன் பெயரையே மனம்
காதல் வேதமாய்

மெல்லிய காற்று கூட
அவளின் நினைவை
சொல்லி விடுகிறது