ஓய்ந்திருந்தாலும்
சீண்டி செல்கிறாய்
நினைவால் மயிலிறகாய்
மௌனமும் அவளிடம்
பேச்சாய் பதிகிறது
அருகில் இருந்தால்
தடைகள் இல்லாத ஆசைதான்
காமத்தின் மெல்லிய இசை
சில சமயங்களில்,
நான் சொல்வதை
நீ கேற்பதும்,
நீசொல்வதை,
நான் கேற்பதும்,
அன்பியலில்
அழகான புரிதல்...
புரிந்தால் பிரிவேது...
தேடலுக்காகவே
காணாமல் போகிறாய்
கண்களுக்கு தண்டனையை
கொடுத்து
இரவு பேசும் மொழி
காதலின் நிசப்த காமத்தில்
வெளிப்படுகிறது
கண்கள் பேசும் மொழி
காதலை சொற்களிலிருந்து
மீட்டெடுக்கிறது
சுருங்கிய இடைவெளிகளில்
உணர்வுகள் பரவ
காமம் சின்ன ஓவியம் போல
வர்ணம் சேர்க்கும்
பாசத்தைப் பொழிய
பலர் இருப்பினும்
மனம் களைப்பாகும் போது
இளைப்பாற தேடுவது
என்னவோ உன்
மடியைத்தானடா
வாயின் முத்தம் விட
நெஞ்சின் மூச்சு
காதலைச் சொல்கிறது
💖 பக்கம் 72 / 478
📋 Copied