கடந்து
போகும்போதெல்லாம்
காதலை கலந்தே
போகின்றாய்
கண்களில்...
வெறும் சுவாசம் கூட
பிணைக்கும்
காதலில் தடைகள் இல்ல
இருவர் பேசாமல் உட்கார்ந்தாலும்
அந்த மௌனம்
காதலாக பரிமாறப்படுகிறது
சேலை மடிப்பில்
விளையாடும்
உன் விரல்களிலும்
நாத இசை
வீணை மீட்டாமலேயே
உனை
வர்ணிக்கும் போதே
கவிதையும்
கொஞ்சம் வெட்கப்படுகிறது
தோள் சாயும்
அந்த ஒரு நிமிடம்
என் வாழ்நாளின்
நிரந்தர நிம்மதி
இமைகள் கொண்டு
சிறை பிடித்து
விட்டேன் உனை
கனவு கலைந்தாலும்
நீ கண்களிலிருந்து
தப்பிவிடாதிருக்க
முழு உலகம்
இருளில் மூடப்பட்டாலும்
காதலன் உள்ள சிரிப்பு மட்டும்
ஒளியாகும்
விட்டு பிரியும்
தருணத்தில்
மொத்த காதலையும்
கொட்டுகிறேன்
உன் கரத்தினுள்
என் கையை
பற்றிக்கொள்ளேன்
என்று
இதயத்தில் இடம் கொடுத்தவனை
மறக்க முயன்றாலும்
நினைவு கதவை மூட விடாது
💖 பக்கம் 42 / 478
📋 Copied