ஆரவாரமில்லா
உன் காதலில்
ஆழமாய்
நானும் மூழ்கித்தான்
போகிறேன்
அழகாய்
நமக்கான உலகுக்குள்
புன்னகையில் மறைந்திருக்கும்
ரகசியமே காதலின் ஆழம்
உன் கழுத்தை
கட்டிக்கொண்டு
ஆளும் டை மீதும்
கொஞ்சம்
பொறாமையே
என்னிடத்தை
பிடித்து விட்டதே
என்று
திரும்பி பார்ப்பதும்
விரும்பி கேட்பதும்
உன் பெயர்
ஒலிக்கும் போதே
நம் நினைவு
சுவையில் பருக
நினைத்த தேனீரும்
ஆறிப்போனது
சுவையற்று
தொடர்வதில் தவறு இல்லை
உணர்வில் மட்டுமே
பரிபூரண காதல் பிறக்கிறது
அருகில் சாயும் தோள்
ஆயிரம் கனவுகளுக்கு
உயிர் கொடுக்கிறது
நீ வரும்
வழியில்
விழி நொடியும்
யுகமாய் நகர்கிறதே
தொடர்வது
பிடிக்கும்
உன்னை
நினைவிலும்
நினைவிலும்
நிஜத்திலும்
என் மகிழ்வெல்லாம்
உன்னால்
💖 பக்கம் 404 / 478
📋 Copied