புன்னகை பார்த்த நொடியே
மனம் ஒப்பந்தம் செய்துவிட்டது
சிரிப்பில் தோன்றும் ஒளி
இதயத்தின் இருளை கரைத்தது
இதயத்தில் இடம் பெற்றவள்
முகத்தில் பதிந்துவிடுகிறாள்
அது காதலின் நேரடி காட்சி
நட்சத்திரம் நிறைந்த இரவிலும்
என் பார்வை உன் முகத்தின்
ஒளியைத்தான் தேடுகிறது
அரை நொடி வாழ்ந்தாலும்
போதுமடி உன் அரவணைப்பில்
நான் வாழ வேண்டும்
அடுத்த நொடியே மரணம்
வந்தாலும் சுகமாய் ஏற்பேன்
இல்லாத பருக்களும்
முகத்தில் அவ்வப்போது
எட்டி பார்க்குது
வெட்க துளிகளாய்
உன் பார்வையிலிருந்து
மறைந்து கொண்ட போதும்
உனை காணும் ஆசையில்
காதல் என்பது
கண்கள் சந்திக்கும் நேரத்தில்
நேரம் நிற்கும் அதிசயம்
வேண்டும் எப்போதும்
இந்த நெருக்கம்
மனதிலும் என்னுயிரே
தேநீரில்
கரைந்த சக்கரையாய்
கலந்துவிட்டாய்
என்றும் திகட்டாத
தித்திப்பாய் மனதில்
பக்கத்தில் நீயில்லாத
போதும்
வெட்கத்தில் தடுமாறுது
வார்த்தைகளும்
எங்கிருந்தோ
உன் குரல் அழைக்க
💖 பக்கம் 403 / 478
📋 Copied