ஆணிவேராய்
நீயிருப்பதால்
அழகான மலராய்
வாசம் வீசுகிறேன்
இம்மண்ணில்
அருகில் இருந்த ஒரு கணம்
ஆயுள் முழுக்க நினைக்க வைத்தது
என் வாழ்க்கையின் தலைப்பு நீ
இதயத்தின் கதையாய்த் தொடர்கிறாய்
உன் அதிகாரமும்
பிடிக்கும்
அது அன்பு
கலந்த
அணைப்பென்றால்
இதயத்தின் இருள்
தெருவில் நீயே
ஒளி பாயும் விளக்கு
மழைத்துளியில் நனைவது போல
காதலரின் பார்வையில்
உருகுவது ரொமான்ஸ்
திரும்பாத நாட்களின்
திரும்பிய பக்கமெல்லாம்
திரும்பத் திரும்ப
தீண்டிவிட்டுச் சென்றது
உனதன்பை மட்டுமே
தினம் ஜெயித்து
கொண்டிருக்கிறாய்
உனை மட்டுமே
நினைக்க வைத்து
காதலில் எனை
நாம் இருக்கும் இடம்
தூரமாக இருந்தாலும்
உன் மனதில்
என் மனதில்
அருகில் இருக்கிறோம்
உன்னால்
நான் உணர்ந்த கவனம்
என் இதயத்தில்
என்றும் நிலவுகிறது
💖 பக்கம் 398 / 478
📋 Copied