காதல் என்பது அழகான தீ
அதை அணைக்கும் துணிச்சல்
நம்மில் இல்லை
எழுதிடுவோம்
ஒரு புதுக்கவிதை
விழிகளில் கலந்து
இதயத்தில் நுழைந்து
உறக்கம்
கலையுமுன்
தட்டியெழும்பும்
கடிகாரமுள்ளாய்
நீயும் எழுப்புகிறாய்
மனதை நினைவுகளால்
நெருக்கம் இல்லாமல்
ஏற்பட்ட உறவு
தீயின் அருகே கரைந்த
பனிபோல் அழகு
இசையாக நிறைந்த மௌனத்தில்
தோள்களில் சாயும் கணங்கள்
ஒரு பரவசம்
நிலவுக்கும்
ஒருநாள்
விடுதலையுண்டு
உன்
நினைவுக்கு
ஒருபோதும்
விடுதலையில்லை
காதலின் மென்மையான சாயல்
சோர்வான நாட்களை
வசந்தமாக மாற்றுகிறது
அவளது சிரிப்பில்
ஒரு உலகத்தை காணலாம்
அதில் வாழ்ந்து விடும்
ஆசைதான் காதல்
காத்துக் கிடத்தலின்
சுகம் அறிகிறேன்
என் காதலே
நீ என்னை தழுவும்
நொடிகளுக்காக
ஓய்வில்லா நெடுஞ்சாலையாய்
மன சாலையில்
நீ நடமாடுகிறாய்
வருவதும் போவதுமாய்
💖 பக்கம் 392 / 478
📋 Copied