விடைப்பெறட்டும்
நாணம்
விடைத்தருகிறேன்
நானும்
உன் பார்வையின்
கேள்விக்கு
புன்னகை ஒரு பார்வை
வாழ்வை முழுதும்
உருக்கக் கூடியது
அவனுக்கும் எனக்குமான
தூரம் ஒன்றே நிர்ணயிக்கும்
என் புன்னகையின் நீளத்தை
எண்ணங்களுக்கு
பஞ்சமேயில்லை
உனக்கான ரசனையில்
தொடர்கிறது
முற்றுப்புள்ளி இன்றி
நினைக்க நினைக்க
இனிமையாய்
சிரிப்பு ஒரு முகத்தில்
மட்டும் இல்லாது
அது இதயத்தில் ஒலிக்கும் ஒலி
மனதை இரும்பாக்கி
கொண்டாலும்
இழுக்கின்றதே
உன்திசை நோக்கி
உன் நினைவும்
என்ன காந்தமா
கண்களில் பேசும் மௌனம்
இதயத்தில் காதல் எழுதும் கவிதை
உன் நினைவுகள்
என் இதயத்தில்
பூக்கும் ரோஜாக்கள்
பார்த்த ஞாபகம
என்னுள் சிறகடிக்கிறது
உன்னை பார்க்காத போதும்
பார்த்துக் கொண்டிருக்கும்
உறவை விட காத்துக்
கொண்டிருக்கும்
உறவுக்குத் தான்
பாசம் அதிகம்
💖 பக்கம் 386 / 478
📋 Copied