அழகு ஒரு முகம் அல்ல
அதைக் கவனிக்க வைத்த
ஒரு பார்வைதான்
காதல் வந்ததுமே
தனிமை கூட
இனிமையாக மாறிவிட்டது
காரணம் வைத்து பிடிப்பதில்லை
காதல் காரணமே இல்லாமல்
பிடிப்பது தான் காதல்
பேசா நொடிகளில்
பேசி கொல்கிறாய்
பார்வையில்
பெரியதாய்
காரணம் ஒன்றும் இல்லை
உன் பிரிவு ஒன்றை
தவிர என் வலிகளுக்கு
உன் பார்வை
வெப்பத்தில்
நானுமொரு
மெல்ல உருகும்
மெழுகுதான்
அருகில் இருந்தால்
அணைத்து மகிழ்வேன்
தொலைவில் இருப்பதால்
நினைத்து மகிழ்கிறேன்
எப்போது நீ அருகிலிருப்பாய்
எனது உலகம்
ஒரே நொடியிலேயே
அழகானதாக மாறிவிடுகிறது
ஒவ்வொரு முறையும்
பிரியங்களை அதிகமாக
அள்ளித் தெளித்தபடியே
செல்கிறது உன் பிரிவு
சிறு தொடுதலின் நடுக்கம்
ஆன்மாவின் ஆழத்தில்
கவிதை எழுதுகிறது
💖 பக்கம் 357 / 478
📋 Copied