உன் பார்வையின்
மெழுகுவர்த்தியில்
என் இதயம் மெலிந்து
காதலாக ஒளிர்கிறது
தொடு திரையிலோ
தொடும் தூரத்திலோ
என் எதிர்பார்ப்பு
நீ மட்டுமே
உன் இதயத் துடிப்பில்
சிக்கிய என் காதல்
எனது மூச்சாக மாறிவிட்டது
உன்னுடன் செலவழிக்கும்
ஒவ்வொரு நொடியும்
என் வாழ்வின் வர்ணம்
விரல்களால் எழுத முடியாத காதலை
பார்வை சிறப்பாய் எழுதிவிட்டது
நீ மறந்து போன
ஞாபகங்களை
மனம் புதுப்பித்து
கொ(ல்)ள்கிறது தினம்
அன்பு என்பது
கையை பிடிப்பது மட்டும் அல்ல
மனதை தாங்கி நிற்பதும்தான்
சொற்கள் பேசாது
ஆனால் பார்வை
எல்லாவற்றையும் சொன்னது
மனதின் ஓரத்தில்
முளைக்கும் பாசம்
காலத்தின் சோதனையால்
மேலும் ஆழமடைந்து
உயிரின் ஒளியாகிறது
காதலின் அளவை
வரிகளால்
வரைய முடியாது
அது உணர்வுகளின் கடல்
💖 பக்கம் 349 / 478
📋 Copied