💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
மண்ணைப்
திறந்துகொண்டுவரும்
துளிரைப்போலவே
உனது மனதை
திறந்து வைத்த
வரிகளும் அழகு
content_copy
தோளில் சாயும் ஒரு தலை
இதயத்தை முழுவதும்
காலியாக்கி மீண்டும் நிரப்புகிறது
content_copy
கையில் கைபிடித்த
தருணத்தில்
முழு உலகமும்
நின்று போனது
content_copy
மௌனமாக இணையும் பார்வைகள்
வார்த்தையில்லாத நூல்களில்
காதலை நெய்து விடுகின்றன
content_copy
விடுமுறை நாளென்ற
மகிழ்வைவிட நீ
அருகிலிருக்கின்றாய்
என்ற சந்தோஷம்
தான் அதிகம்
மனதில்
content_copy
உன் தாமதத்தில்
திட்டி தீர்க்கிறேன்
கடிகார முட்களை
மெதுவாக நகர்வதாய்
உனை திட்ட
மனமின்றி
content_copy
இரக்கமற்ற
இரவு நீள்கிறது
நீயில்லா நாட்களில்
என் உறக்கத்தையும்
பறித்து
content_copy
இரவில் பகலை நினைவுபடுத்தும்
ஒரு குரலே போதும்
நெஞ்சமெல்லாம் சூடாகும்
content_copy
நீ வேண்டும் என்பதை தவிர
வேறு சிறந்த வேண்டுதல்
எதுவுமில்லை எனக்கு
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் இதயமே
content_copy
நகர்ந்திடாதே
நீயும் சற்று
உறங்கி கொள்கிறேன்
நானும்
உன் விரல்களின்
பிடிக்குள்
💖 பக்கம் 338 / 478
arrow_back
arrow_forward
📋 Copied