மண்ணைப்
திறந்துகொண்டுவரும்
துளிரைப்போலவே
உனது மனதை
திறந்து வைத்த
வரிகளும் அழகு
தோளில் சாயும் ஒரு தலை
இதயத்தை முழுவதும்
காலியாக்கி மீண்டும் நிரப்புகிறது
கையில் கைபிடித்த
தருணத்தில்
முழு உலகமும்
நின்று போனது
மௌனமாக இணையும் பார்வைகள்
வார்த்தையில்லாத நூல்களில்
காதலை நெய்து விடுகின்றன
விடுமுறை நாளென்ற
மகிழ்வைவிட நீ
அருகிலிருக்கின்றாய்
என்ற சந்தோஷம்
தான் அதிகம்
மனதில்
உன் தாமதத்தில்
திட்டி தீர்க்கிறேன்
கடிகார முட்களை
மெதுவாக நகர்வதாய்
உனை திட்ட
மனமின்றி
இரக்கமற்ற
இரவு நீள்கிறது
நீயில்லா நாட்களில்
என் உறக்கத்தையும்
பறித்து
இரவில் பகலை நினைவுபடுத்தும்
ஒரு குரலே போதும்
நெஞ்சமெல்லாம் சூடாகும்
நீ வேண்டும் என்பதை தவிர
வேறு சிறந்த வேண்டுதல்
எதுவுமில்லை எனக்கு
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் இதயமே
நகர்ந்திடாதே
நீயும் சற்று
உறங்கி கொள்கிறேன்
நானும்
உன் விரல்களின்
பிடிக்குள்
💖 பக்கம் 338 / 478
📋 Copied