விழிகள்
படம் பிடித்த
பிம்பம் மனதிலும்
இடம் பிடித்து விட்டது
அழகிய ஓவியமாய்
நீயாக
அருகில் நின்று
மூச்சை கலந்தால்
உலகமே நின்றுபோவதை
உணர்கிறேன்
சின்ன சிரிப்பின் ஒளி
ஆயிரம் இருள்களை மறைத்து
ஆனந்தம் தருகிறது
நீ அருகில்
இல்லையென்ற
வெறுமையில்லை
நொடியேனும்
நகராது
உன் நினைவு
உடனிருப்பதால்
அரை நொடி
நிகழ்வையும்
ஆயுள் வரை
அசைபோடுவதுதான்
காதல்
நெருக்கத்தில் நேரம் மறைந்து
சுவாசத்தில் காதல் கரைகிறது
உன் பிரிவு
என் இதயத்தை
நெடுங்காலமாய்
மரத்துபோகச்
செய்கிறது
மௌனத்தில் பேசும் நெஞ்சங்கள்
வார்த்தைகளால் அணைக்க முடியாத
காதலை வைத்திருக்கும்
எண்ணற்ற கவிதைகள்
ஏட்டில் எழுதினாலும்
உனக்காக மையில்
கலந்து விழியிலொரு
கவிதை நீ ரசிக்க
ஒரு நொடியேனும
தீண்டிச்செல்
பார்வையில் ஒளியிழந்து
கொண்டிருக்கின்றது
விழிகள்
💖 பக்கம் 330 / 478
📋 Copied