உள்ளத்தில் உள்ளதை
பரிமாற்றம் செய்ததால்
அவனும் அவளும் மறைந்து
அவர்கள் ஆகினர்
கண்ணோட்டம் மட்டும் போதாது
உயிரோட்டமும்
சேர வேண்டும் காதலில்
நம்பிக்கை இல்லாத காதல்
காற்றில் பறக்கும்
ஒரு காகிதம் போல
கிறுக்கலில் கூட
உன் பெயரின்
முதலெழுத்தை தான்
விரல்களும் கோலமிடுகிறது
பார்வை ஒன்று போதும்
பரவாயில்லை என்ற வாழ்க்கையே
பாசமாக மாறுகிறது
உன் பார்வையின்
மெழுகுவர்த்தியில்
என் இதயம் மெலிந்து
காதலாக ஒளிர்கிறது
மாயைக்கு மயங்காத
மனம்
மூழ்கி போனது
மாய உலகுக்குள்
காண்பதிலெல்லாம்
நீயென்பதால்
மௌனத்தின் நடுவே
அவள் மூச்சு மட்டும்
காதலுக்குப் பதில் சொல்கிறது
கண்கள் பேசும் பாசத்தை
மொழிகள் அணுக முடியாது
மௌனத்தில் கூட
இதயம் பேசும்
மொழி காதல்தான்
💖 பக்கம் 317 / 478
📋 Copied