சிரிப்பு ஒரு மருந்து என்றால்
அது பாசம் கலந்து வரும் காதல் தான்
உன் கிறக்கத்தில்
கிறுக்குவதெல்லாம்
கவிதையாகின்றது
உன் விழிகள் பேசும் மொழியில்
என் இதயம் சிறைப்பட்டது
உன் புன்னகை காட்டும் பாதையில்
என் பயணம் தொடங்கியது
மார்கழி குளிராய்
மனம்
உன் ஆடை
போர்வையாக
உன் பெயரை
என் இதயம்
சொல்லும் விதம்
வேறு யாராலும்
உச்சரிக்க முடியாது
தொடாமலே பதற்றம் தரும்
ஒரு பார்வை
ஆழ காதலின்
முதல் அடையாளம்
மனதை கொள்ளையடித்து
தண்டனையையும்
எனக்கே கொடுக்கிறாய்
நினைவு சிறைக்குள்
தள்ளி
கொந்தளிக்கு
உன் கோபத்தில் தான்
எத்தனை காதல்
அத்தனையும்
கொல்லுதே என்னை
நிலவின்றி
இரவிருந்தாலும்
உன் நினைவின்றி
துடிப்பில்லை
என்னிதயத்தில்
ஒன்றும் சொல்லாத கண்கள் கூட
வாழ்நாள் முழுதும் பேச வைக்கும்
💖 பக்கம் 237 / 478
📋 Copied