மனம் பிணைந்த இடத்தில்
தூரம் கூட தோல்வியடைந்தது
மௌனமான இரவில் கூட
அவளின் சுவாசம்
நெருப்பாக மாறுகிறது
சில நேரங்களில்
கண்கள் இணையும் நேரம்
உலகத்தின் நிம்மதியை வென்றுவிடும்
இதழின் அருகில் தங்கும் மூச்சு
காதலின் கவிதைதான்
பார்வையில் ஒளிந்திருக்கும்
அந்த மென்மை
இதயத்தின் கதவை திறக்கிறது
தொடுதலின் மெல்லிய அதிர்வில்
ஆயிரம் உணர்வுகள் புயலாகின்றன
உதடுகள் நெருங்கும் அருகாமை
இரவின் தாளத்தை
முற்றிலும் மாறச் செய்கிறது
நிலவின்றி
இரவிருந்தாலும்
உன் நினைவின்றி
துடிப்பில்லை
என்னிதயத்தில்
இரக்கமற்ற
இரவு நீள்கிறது
நீயில்லா நாட்களில்
என் உறக்கத்தையும்
பறித்து
தேடலுக்காகவே
காணாமல் போகிறாய்
கண்களுக்கு தண்டனையை
கொடுத்து
💖 பக்கம் 23 / 478
📋 Copied