தொட்டதுமே ஓடும்
மின்னழுத்தம் போல்
தோலில் கவிதை எழுதுகிறது
உன் எண்ணங்களின் வண்ணங்கள்
என் மனவானில் வானவில்லானது...
உன்
துடிக்கும் இதயமும்
தவிக்கும் நினைப்பும்
எனக்காகவே
இருக்க வேண்டும்
எங்கோ நீயிருந்தாலும்
எனை மறக்காமலிருக்கிறாய்
என்றுணர்கிறேன்
உன் மிஸ் யூ வில்
காதல் என்பது
வார்த்தைகளில் இல்லை
அது ஒரு பார்வையின்
நடையில்தான் தெரியும்
நெருக்கம் வளர வளர
அமைதியும்
இனிமையாக மாறுகிறது
மழைத்துளியில் பாசம்
உன் சிரிப்பில் பரவசம்
தென்றல் தழுவும்
தீண்டலின் உணர்வாய்
காதல் பிறக்கிறது
இதயம் சிலரிடம்
நிம்மதியை காணும்
அதுவே உண்மையான காதல்
இரு கண்கள்
பேசாத வார்த்தைகளை
காதல் புரிந்துகொள்ளும்
💖 பக்கம் 212 / 478
📋 Copied