இதயம் பேசும்போது
காதல் என் மனதை
தொட்டு பேசுகிறது
சந்திரன் கூட பொறாமைப்படும்
புன்னகை தான் என்னை ஈர்க்கிறது
படிப்பதெதுவும்
மனதில் நிலைப்பதில்லை
மனதோடு
நீ மனப்பாடமாகி
போனதால்
கையில் கை சேர்ந்து
நடந்த அந்த நொடியே
வாழ்க்கையின்
முழு பயணம் போல தோன்றியது
இரவு மௌனத்தில்
கைகள் பேசிய மொழி
உடலை முழுவதும் எரியச் செய்கிறது
நினைவுகள் சிலருக்கு
மட்டும் உயிரோடு பேசும்
தொலைதூர நிலவாய்
நீ துரத்தும் மேகமாய்
உன் நினைவில் நான்
குளிர்கிறது மனம்
உன் அன்பின்
போர்வைக்குள்
மௌனத்தின் கரையில்
பார்வை மட்டும் போதும்
இதயம் ஏக்கத்தின் இசையை
கேட்டு உருகும்
பற்றி கொண்ட
கரப்பிடிக்குள்
பத்தி கொல்(ள்)கிறது
காதல் தீயும் அனலாய்
💖 பக்கம் 206 / 478
📋 Copied