அத்தனை எளிதல்ல
உன் நினைவுகளில்
இருந்து விடுபடுவது
மன்னித்து விடு
என்பது அன்பு
அதை அப்போதே
மறந்து விட்டேன்
என்பது பேரன்பு
உன்னைப் போல் தான்
இம்மழையும் விட்டு
விட்டுப் பொழிகிறது
அன்பை என் மேல்
குடையோடு
பயணித்தாலும்
நிழல் தருவது நீயே
என் மனதுக்கும்
நினைவாக தொடர்ந்து
நகைச்சுவையாக தொடங்கிய
உரையாடல்
காதலாக முடிவடைகிறது
என் வாழ்வின் பாதையில்
நீ ஒரு அழகான நட்சத்திரம்
உன்னால் தான் நான்
வழி காண்கிறேன்
நீ நினைப்பது போல் என் கவிதை
எல்லாம் கற்பனை அல்ல நிஜம்
பிரிவுகூட சுகமே
நீயும் எனைக்காண
தவித்திருக்கும் போது
நினைவுகளால் உருவான மனிதர்
மனதின் அடித்தளத்தில் தங்கியிருப்பார்
நீ ருசித்த
மிச்சமென்றால்
எப்போதும் சுவை
அதிகம் தான்
(தேனீர்)
💖 பக்கம் 134 / 478
📋 Copied