நேரம் நின்றது
போலத் தோன்றும்
ஒவ்வொரு கணம்
அவள் பார்வையில் சிக்கியதும்
நீயோ வேராக
மறைந்து கொண்டாய்
உன் நினைவுகளோ
படர்கிறது கொடிபோல்
மனமெல்லாம்
ஆடி களைத்து
ஓய்ந்து கிடக்கும்
சிலம்பாய்
மனம்
உனை தேடி
களைத்து
ஓய்ந்து கிடக்கு
காதல் என்பது
ஒரு கண்ணியமான நிலை
அது வேதனையை
பூவாக மாற்றும்
சிறப்பான விலைமதிப்பற்ற சக்தி
முற்றுப் பெற்றது
என்ற பெருமூச்சோடு
அள்ளி முடிந்தாலும்
மனம்
அவிழ்த்து விடுகிறது
உன் நினைவுகளை
நீதான்
என் உயிர்மூச்சென்று
புரிந்துக்கொள்ளும் வரை
எதையும் ரசிக்கவில்லை
புரிந்துக்கொண்டபின்
உன்னை தவிர
எதையும் ரசிக்கமுடியவில்லை
உன் ஆசைகளில்
நான் கனவாக வந்தாலும் பரவாயில்லை
ஆனால் உன் வாழ்க்கையில்
நிஜமாக இருக்க விரும்புகிறேன்
நிறை குடமும்
தளும்புது
கண்கள் உனை காண
மனமும் தள்ளாட காதலில்
தொடும் தூர நிலவும்
நெடுந்தூரமானது
ரசிக்க நீயின்றி...
நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையும்
காதல் கவிதையாக
எனது இதயத்தில் பதியிறது
💖 பக்கம் 119 / 478
📋 Copied