காற்றில் கலக்கும்
வாசனை கூட
இதயத்தை மயக்குகிறது
மிகவும் பிடித்த
பொருளொன்று
தொலைந்து
மீண்டும்
கைகளில்
கிடைத்தது போல்
மனம் மகிழ்வில்
உனை காணாமலிருந்து
கண்கள் கண்டதும்
அவளின் புன்னகையில்
அடங்கியிருக்கும்
என் பூரணமான உலகம்
கண்ணை அலங்கரிக்கும்
மையாய்
என்னை அலங்கரித்து
கொள்கிறேன்
உன் அன்பால்
மனத்தில் சிதறிய ஆசைகள்
நடுவே காதல் மலர்ச்சி பெறும்
நாட்கள் மாறலாம்
மாதங்கள் மாறலாம்
வருடங்கள் மாறலாம்
உன்னென் தோற்றங்களும்
மாறலாம் மாறாதே
என்றும் நானுன்
மீது கொண்ட காதல்
என் காதல் கணவா
மௌனமான கண்களில்
ராகங்கள் ஒளிந்திருக்கும்
இசை கேட்கத் தேவையில்லை
எனக்கு பிடித்து
செய்ததை விட
உனக்கு பிடிக்கும்
என்று செய்ததே அதிகம்
கண்களில் பசுமை
மிதக்கும் தருணம்
காதல் பிறக்கும் நொடி
ஆதவன் பார்வையில்
மலரும் தாமரையாய்
உனதன்பின் ஒளியில்
மகிழ்வாய் மலருது
மனம் எனதன்பே
💖 பக்கம் 116 / 478
📋 Copied