உன் வலியால்
என் விழிகள்

காதல் என்பது
இரு இதயங்களின் மொழி
வார்த்தைகள் இல்லாமலே
பேசும் உணர்வு

காதலின் ஆழத்தில்
பிறக்கும் தீப்பொறி தான் காமம்

கண்கள் சந்திக்கும் இடத்தில்
வார்த்தைகள் மௌனமான
பாதை எடுக்கின்றன

மௌனத்தில் பேசும் பார்வைதான்
சில நேரங்களில்
முழு காதலை சொல்கிறது

ஞாபகமறதியை ரசிக்கும்
அதே காதல் தான்
ஞாபகத்துக்கு கூட
நினைத்து பார்க்காமல்
மாற்றமடைகிறது

வாழ்க்கை பாதையில் இவ்வாறு
அல்லவா சிக்கிகொண்டேன்
ஒருவரை மறக்கவும் முடியாமல்
வெறுக்கவும் முடியாமல்
நான் படும் வேதனை

உன் விரல்கள்
என் தோலில் பயணிக்கும்போது
என் உடல் அது எழுதும்
கவிதையாக மாறுகிறது

தேவை முந்ததும் நான்
யாரோ தான உனக்கு
அதான் தூக்கி எறிஞ்சிட்ட

உன்னில்
நான் காணும் அழகு
என் வாழ்வின்
ஒவ்வொரு நாளையும்
சிறப்பாக்குகிறது