மழைத்துளியில் கூட
காதலரின் முகம்
பிரதிபலிக்கும் தருணம் தான்
ரொமான்ஸ்
அதிக
நேசத்தை தராதே
உன் சிறு
மௌனத்திலும்
மரணத்தின் வலியை
அனுபவிக்குது மனம்
தடைகள் இல்லாத பரிசளிப்பு
அவளின் பார்வைதான்
அவன் தரும் பரிசுகளில்
என்றும் நான் விரும்புவது
காதலுடன் அவன்
வைத்து விடும்
ஒரு முழப் பூவே
பார்வை தொடும் முன்
இதயம் உருகி விடுகிறது
விடுபட நினைத்தும்
விடைபெற முடியாமல்
தொடர் கதையாய்
தொடருது
உன் நினைவு
முடிவுரை புரியாமல்
எத்தனை
ஊடல் வந்தாலும்
இறுதியில்
மனதில் நிற்பது
உன் சமாதான
முத்தமே
அன்று இரவெல்லாம்
பகலுக்காக காத்திருந்தேன்
உன்னை நேரில் காண்பதற்கு
இன்று பகலெல்லாம்
இரவுக்காக காத்திருக்கிறேன்
என் கனவில் காண்பதற்கு
உன் உதடுகளிலிருந்து
வரும் ஒவ்வொரு சொல்
என் மனதை
புதிய உலகத்தை
நோக்கி அழைக்கின்றது
அலங்கோலம்
தான் பிடிக்கும் போல்
உன் கண்களுக்கு
அடிக்கடி கலைத்து
ரசிக்கின்றாயே
கூந்தலை
💖 பக்கம் 113 / 478
📋 Copied