உன்னை சுற்றி
உள்ளவர்களை
மகிழ்ச்சியாக வைத்திருக்க
விரும்பினால்
முதலில் நீ மகிழ்வாக
இருக்க வேண்டும்
உன்னிடம் இல்லாத ஒன்றை
யாருக்கும் தர இயலாது
(மகிழ்ந்து மகிழ்விப்போம்)
வாழ்க்கை என்பது
ஒரு கலை
அதை எப்படி
உருவாக்குவது என்பது
உன் கையில் உள்ளது
உன் எண்ணங்கள்,
உன் செயல்கள்
உன் வாழ்வின்
வடிவத்தை நிர்ணயிக்கும்
அழிவின் எல்லையிலும்
புதிய வாய்ப்புகள்
மறைவாகக் கிடக்கும்
தேடுவதற்குத் துணிச்சல் தேவை
பிறந்து விட்டோம் என்று
வாழாதீர்கள் இனி பிறக்கப்
போவதில்லை என்ற
எண்ணத்துடன் வாழுங்கள்
மழையில்லா வாழ்கையின்
மதிப்பை தெரிந்துகொள்ள
காற்றின் தாக்கம் போதும்
ஒவ்வொரு முறையும் அன்பை
நிருபித்துக் கொண்டே இருக்க
முயற்சி செய்யாதீர்கள் அது
தற்கொலையை விட கேவலமானது
நேற்றைய கவலைகளை
சுமந்து கொண்டு
இன்றைய சூரியனை பார்க்காதே
பழைய பாரத்தை
இறக்கி வைத்தால் தான்
புதிய பயணம் சுகமாகும்
சிறிய முன்னேற்றங்களை கூட
கொண்டாடும் பழக்கம்
பெரிய சாதனைகளை உருவாக்கும்
மௌனமாய் நீயுறங்க
என் விழிகளிலோ
பல கனவு
உங்களைத் தாக்கும்
எதிரிக்கு பயப்படாதீர்கள்
ஆனால் உங்களை
கட்டிப்பிடிக்கும் போலி
நண்பருக்கு பயப்படுங்கள்
📖 பக்கம் 392 / 606
📋 Copied