கடந்து போறது தான் வாழ்க்கை
கவலைகளையும்
கஷ்டங்களையும்
அவமானங்களையும்
தோல்விகளையும்
தேவையில்லாத பழிகளையும்
துரோகங்களையும்
ஏமாற்றங்களையும்
கேலிப் பேச்சுக்களையும்
கடந்து போய் தான் வாழனும்
இதையெல்லாம் கடந்து போகாம
ஒரு வாழ்க்கையை வாழ முடியாது
நீ முன்னேறும்போது
சந்திக்கிற எதிர்ப்புகள்
உன் வெற்றியின்
உயரத்தை நிர்ணயிக்கும்
வீழ்ந்ததை நினைக்காமல்
எழும் எண்ணமே
முன்னேற்றத்தின் விதை
மற்றவர் வளர்ச்சி
உனக்கு சிக்கலாக இருந்தால்
நீ வளர மறுக்கிறாய்
புரிந்து கொண்டால்
தனிமையும் பேரழகு தான்
ஏனென்றால்
நம்மை காயப்படுத்த
அங்கு ஒருவரும்
இல்லை என்பதால்
தன் வார்த்தைக்கு
கட்டுப்பட்டு
நடப்பவர்களையே
நல்லவர்கள் என
புகழும் இந்த உலகம்
இங்கு
சில நாள் பேசாமல்
இருந்து பாருங்கள்
பல பேர் காணாமல்
போய்விடுவார்கள்
அன்பைக் காட்டுவதற்கு
மட்டுமல்ல
கோபத்தைக் கொட்டுவதற்கும்
பிரியமானவர்கள்
தேவைப்படுகிறார்கள்
மீண்டும் எழுந்து நிற்கும்
துணிவு இருந்தால்
எந்த தோல்வியும்
நிரந்தரமில்லை
தான் மாறவில்லை
என்றாலும்
சூழ்நிலை ஒவ்வொரு
மனிதனையும்
மாற்றிவிடுகிறது
📖 பக்கம் 278 / 606
📋 Copied