எந்த அவமானத்தையும்
வலியாய் எடுத்துக்கொள்ளாதீர்
வழியாய் எடுத்துக்கொள்ளுங்கள்
இங்கே கை தூக்கி
விடுபவர்கள் விட
கை தள்ளி கீழே
விழவைப்பவர்களே அதிகம்
வாழ்வை வெல்வோம்
அழகானது பிடிக்கிறது
என்பதை விட
பிடித்ததினால் அழகாக
தெரிகிறது என்பதே உண்மை
சிரமம் வந்தால் நிற்காதே
அது வாழ்வின்
புதிய கதவை திறக்கிறது
ஒரு நொடி துணிவே
ஆயுள் முழுக்க
மாற்றத்தைத் தரும்
வலி வந்தாலே
தவம் செய்யவேண்டும்
என்பது வாழ்க்கையின் மரபு
நேர்மையோடு
வாழ்வதில் தவறில்லை
அதே நேர்மையை
பிறரிடம்
எதிர்பார்ப்பதுதான் தவறு
ஒரு பிரச்சனையின் ஆயுள்
பெரும்பாலும் அதை
விடப் பெரும் பிரச்சனை
வரும் வரை தான்
தோல்விகளை சமாதானமாக
ஏற்கும் மனமே
வாழ்க்கையை சமநிலையுடன் நடத்தும்
உணர்வுகள் கொல்லப்பட்ட
நடைபிணமாய் வாழ்ந்து
கொண்டிருக்கின்றனர் பலர்
தன்னை நம்புகிறவன்
எல்லா சோதனைகளையும்
வெல்லுகிறான்
📖 பக்கம் 215 / 606
📋 Copied