சட்டென்று அணைத்து கொள்ளும்
அந்த நொடி
இந்த உலகத்தை
மறந்து விட வைக்கும்
காதல் என்பது
கண்களால் உணர்வது இல்லை
இதயங்களால்
சேர்ந்து எழுதும் கவிதை
உன் நினைவு
சுவையில்
ஆறிப்போனது
தேனீரும்
தயக்கம் இருந்தாலும்
நெருக்கத்தை தூண்டுகிறது
உன் நேசம்
நீ என்னவன் என்று
மறைக்க முடியாத ஆசை
இரவின் அமைதியில்
கனவுகளுக்குள் நெருப்பாக
புகுந்து இதயத்தை எரிக்கிறது
இடம் மாறிய
பின்னே இதயமும்
சீராய் துடிக்குது
உன் பெயரை சொல்லி
தோளில் சாய்ந்த கனவு
நிஜத்தை விட
இனிமை தருகிறது
உன் நேசத்தின்
நறுமணத்தில்
என் சுவாசமடா
அன்பே
நான் பேசாமல் இருந்தாலும்
என்னை விட்டுப் போகாமல்
காத்திருப்பது தான்
உன் அன்பின் அளவு
நம்பிக்கை இல்லாத காதல்
காற்றில் பறக்கும்
ஒரு காகிதம் போல
💖 பக்கம் 457 / 478
📋 Copied