அலங்கோலம்
தான் பிடிக்கும் போல்
உன் கண்களுக்கு
அடிக்கடி கலைத்து
ரசிக்கின்றாயே
கூந்தலை
தனித்து சென்றாலும்
துரத்தி வருகிறாய்
நினைவாகி என்னை
முடிவில்லா பாதையில் கூட
காதல் ஒருவரை விடாமல் சேர்த்துவிடும்
நகரட்டும்
நொடிகளும் மெல்ல
நீ நகராமால்
இருந்து விடு
என்னுடனேயே
நினைவோ நிஜமோ காதல்
என்றும் நீங்காத வலிய
மட்டுமே கொடுக்கும்
எந்த மலரிலும்
உணரவில்லை
நீ கொடுத்த இந்த....
பூவின் நறுமணத்தை
ஆசைகளை துறக்க
நினைத்தால்
மொத்த ஆசைகளின்
உருவமாய்
நீ சூழ்ந்து
கொ(ல்)ள்கிறாய் மனதில்
அம்பின்றி வேட்டையாட
பிடிக்கும் உனை
காதலால் கண்களில்
இதயத்தின் துடிப்பும்
பார்வையின் அமைதியும்
சேரும் போது
காதல் கனவில் மாறும்
தடுமாறும் சுவாசத்தில் கூட
அவளது வாசனை தங்கியிருந்தால்
அது ரொமான்ஸ்
💖 பக்கம் 231 / 478
📋 Copied