விடைபெறும்
போதெல்லாம்
பரிசாக்கி
செல்கின்றாய்
அழகிய
தருணங்களை...
இரண்டு இதயங்களும்
ஒரே துடிப்பில்
தாளமிடும் பொழுது
காதல் உண்மையாகும்
நான்
சரியா தவறா
தெரியாதென்றாலும்
எனக்காக எப்போதும்
நீயிருப்பாய்
என்று மட்டும்
தெரியும்
நினைவுகளில் நிறைந்திருப்பதை விட
நெஞ்சில் ஒளிந்திருப்பதே
உண்மையான காதல்
இதயம் மெதுவாக
சாயும் இடமே
உண்மையான காதலின் வீடு
நினைத்துக் கொள்ளவது
கூட ஒரு வகையான
சந்திப்பு தான்
மூச்சுகள் மோதும் நொடி
நேரம் தன் பாதையை மறக்கிறது
தொலைவில் இருந்தாலும்
நினைவின் அருகாமை
காதலை நெருக்கமாக்குகிறது
கண்கள் பேசும் மெளனமே
சில சமயம்
உணர்ச்சியின் உச்சமாகும்
எண்ணங்கள் பேசாத நேரத்தில்
இதயங்கள் தான்
கவிதை எழுதுகிறது
💖 பக்கம் 229 / 478
📋 Copied