மாறும் உலகிற்கு
மாற்றங்கள்
தேவை தான்
மனதிற்கு அல்ல
எதுவுமே செய்யாமல் வீணாகும்
வாழ்க்கையை விட எதையாவது
செய்யும் போது ஏற்படும்
தவறுகள் மிகவும் பயனுள்ளது
கண்ணியமானதும் கூட
என்னதான்
நம் வாழ்வில்
ஆயிரம் மாற்றங்கள் ஏற்பட்டாலும்
அவை இழந்தநினைவுகளை
மீட்டுத்தருவதில்லை
பொறுமை கடலினும் பெரிதாம்
அதனால்தான் பலரும் அதனுள்
இறங்க மறுக்கிறார்களோ
குழந்தைகளின்
புன்சிரிப்புக்கு
மதி மயங்காது
யாருமே இருக்க
வாய்ப்பு இல்லை
(அழகு)
புன்னகை மட்டுமே
கடினமான செயலைக்கூட
எளிமையாக்கும்
அனைவரும்
அருகில் இருந்தும்
அனாதை போல்
உணர வைக்கின்றது
நாம் நேசித்தவரின் பிரிவு
வாழ்க்கை சீராக அல்ல
சுவாரஸ்யமாக இருக்கட்டும்
தனக்கென பாராமல் பிறரை
மகிழ்விப்பது இயற்கை தான்
செயற்கைக்காக அதனை அழிப்பது
மனிதன் செய்யும் பாவம்
வாழ்வை எண்ணத்தில் அல்ல
அனுபவத்தில் அளக்க வேண்டும்
📖 பக்கம் 316 / 606
📋 Copied