விடாமுயற்சியில் நடைபயின்று
தன்னம்பிக்கையை விதையாக்கு
இலக்கினை குறிவைத்து
பயிற்சியைப் பாடமாக்கு
துணிவை முன்னிருத்தி
துதிப்பாடாமல் முன்னேறு
தோல்வியில் வினாயெழுப்பி
வாழ்வியலை அடிப்படையாக்கு
சோதனையை மூலதனமாக்கி
வெற்றிக்கொடி கட்டு
அவமானம் படும்போது
அவதாரம் எடு
வீழ்கின்ற போது
விஸ்வரூபம் எடு
வாதாடுவதை விட்டு
விட்டு வாழ்ந்துக் காட்டு
நமக்கு நாமே
ஆறுதல் கூறும்
மன தைரியம்
இருந்தால்
அனைத்தையும் கடந்து போகலாம்
சின்ன சோகங்கள் பேசமாட்டாது
ஆனால் பெரிய வலி
மௌனமாக அழும்
விட்டுக் கொடுங்கள்
அல்லது
விட்டு விடுங்கள்
நிம்மதி நிலைக்கும்
ஏமாத்திட்டாங்க
என்பதை விட
பயன்படுத்திகிட்டாங்க
என்பது தான்
பொருத்தமாக இருக்கும்
உங்களால் உண்மையாக இருக்க
முடியாதபோத போலியான
வாக்குறுதிகளை அளிக்காதீர்கள்
எப்படியெல்லாமோ
வாழ வேண்டும்
என ஆசைப்பட்டு
ஒரு கட்டத்தில்
எப்படியாவது
வாழ்ந்தால் போதும்
என்ற மனநிலையில்
தள்ளிவிடுகிறது வாழ்க்கை
ஒரு போலியான
உறவை நேசித்து
நாமே நம் மனதை
காயபடுத்தி கொள்வதை
விட தனிமை மேலானது
நம்பிக்கையில்லாமல்
வெற்றி என்பது
வெறும் கனவு மட்டுமே
📖 பக்கம் 270 / 606
📋 Copied